ஏற்கனவே போஸ்டன் (Boston), டாலஸ் (Dallas) ஆகிய நகர நிர்வாகங்களும் நியூயார்க் மாநில நிர்வாகமும் அத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளன.
கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் சுமார் 112,000 பேர் மாண்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் 14 நாள்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கவேண்டும்; சாத்தியமானால் வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாஷிங்டனில் இலவசமாகக் கிருமித்தொற்றுச் சோதனை செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை நேரங்களிலும் வார இறுதியிலும் தீயணைப்பு நிலையங்களிலும் அத்தகைய இலவசச் சேவை வழங்கப்படுகிறது.