இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இந்த 'இழப்பு' எதிர்பார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
களுத்துறை, ரத்மலான மற்றும் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதிகளில் இவ்வாறு 890 மில்லியன் ரூபா செலவில் செயற்கைக் கரையோரப் பகுதி உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்கள் பணம் விரயமாகியுள்ளதாக ஹர்ஷ அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.