எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை இதுவரை மேற்கொள்ளவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான பயண செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை என நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைசார் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்கமைய விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் கொரோனா என்ற கொடிய நோய்க்கு மத்தியில் விமான நிலையத்தை திறப்பதற்கு சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பே மிக முக்கியமாகும். அவர்களின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.