முன்னாள் அமைச்சர் தொண்டமானின் இறுதிச்சடங்குக்கு சென்ற பத்திரிகையாளர் உட்பட இருவருக்கு கொரோனா அறிகுறிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் தொண்டமானின் இறுதிச்சடங்குக்கு சென்ற பத்திரிகையாளர் உட்பட இருவருக்கு கொரோனா அறிகுறிகள்!

ஹெட்டன் தமிழ் பத்திரிகை செய்தியாளர் ஒருவரும், அவரின் வீட்டில் இருந்தவர்களும், வாகன சாரதி ஒருவரும் நேற்று (02) முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை மக்கால் சுகாதார பரீட்சாளர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகையாளர் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொட்ண்டமான் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த பத்தரமுல்ல பிரதேசத்தில் இருக்கும் அவரின் வீட்டுக்கும் அவரின் கட்சி காரியாலத்திற்கும் சென்று வந்துள்ளார்.

அமைச்சரின் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டதும் குறித்த பத்திரிகையாளருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் மக்கள் சுகாதார பரீட்சாளர் தெரிவித்தார்.

அப்பத்திரிகையாளருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் பீ. சீ. ஆர். பரிசோதனைகளை செய்துள்ளார்.

பி. சீ. ஆர். பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகளை செய்யவுள்ளதாகவும், மீண்டும் ஒரு முறை பி. சீ. ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளப்படவும் உள்ளார். மற்றைய நபர்கள் தங்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.