எனது அறிவுரைகளை கேட்டிருந்தால் மே மாதம் நாட்டை வழமைக்கு திருப்பியிருக்க முடியும்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது அறிவுரைகளை கேட்டிருந்தால் மே மாதம் நாட்டை வழமைக்கு திருப்பியிருக்க முடியும்

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தான் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாத இறுதியில் நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவந்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று (07) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.


பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.

அதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில் பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அசியல் ரீதியான நம்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்​கொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

உலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.