இந்தியா - தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவிவரும் நிலையில், பீதியில் ஏராளமான இந்திய தமிழ் மக்கள் அகதிகளாக அங்கிருக்கும் படகு உரிமையாளர்கள் அதிகமான பணம் வசூலித்து இலங்கைக்கு படகு மூலம் நாடு கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடலின் போதே குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஆறு பேரையும் விசாரணைக்கு உட்படுத்திய போலீசார், தாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு ஓர் கட்டிட நிர்மாண கூலி வேலைக்காக வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான உண்மை நிலைப்பாட்டை அறிய டெல்ஃப்ட் தீவின் போலீசாருடன் தொடர்பு கொண்டு குறிகாட்டுவான் போலீசார் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர்.
இருந்தபோதிலும், வீசா மற்றும் வேறு எந்தவித ஆவணங்களும் இன்றி படகுகளின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் இடமான குறிகாட்டுவான் பகுதியில் இவர்கள் இருந்தமை தொடர்பின் பொலிஸாருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க குறிகாட்டுவான் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.