கடந்த 4 மாதங்களாக கூடுதல் நேர வேலைக்கு (OT) சம்பளம் வழங்கப்படவில்லை! -GMOA

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த 4 மாதங்களாக கூடுதல் நேர வேலைக்கு (OT) சம்பளம் வழங்கப்படவில்லை! -GMOA

மருத்துவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக கூடுதல் நேர வேலைக்கு
சம்பளம்  வழங்கப்படவில்லை, இருந்தும்  கோவிட் 19 நெருக்கடி  காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாதுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் மேல் மாகாணத்தில் மட்டும் 3000 வைத்தியர்கள் தங்கள் கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.

GMOA இன் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சோய்சா தெரிவிக்கையில், அவர்கள் இதைப்பற்றி தொடர்ந்தும் அதிகாரிகளுக்கு நினைவூட்டியிருந்தாலும், கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவொரு சாதகமாக தீர்வும் அளிக்கபடவில்லைல்லை என தெரிவித்தார்.

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் தாங்களால்  தற்போது எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.