பொலிஸாரின் சிறப்பு தேடுதலில் 76 துப்பாக்கிகளுடன் 25,000 சந்தேக நபர்களை கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் சிறப்பு தேடுதலில் 76 துப்பாக்கிகளுடன் 25,000 சந்தேக நபர்களை கைது!

police arrested 76 suspects
கடந்த ஜூன் 06 முதல் நேற்று (20) நள்ளிரவு வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 25,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை, 76 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6,420 நபர்கள் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான, 5 கிலோ ஹெராயின், 217 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 760 கிராம் ஐஸ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், 52 சந்தேக நபர்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கத்தி மற்றும் 3 வாள்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 06 சந்தேக நபர்கள் 367 கிராம் வெடிபொருட்கள், 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 07 கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று, 179,782 லீட்டர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 5,574 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய 5,110 நபர்களும், வேறு குற்றங்களைச் செய்த 8,750 நபர்களும் குறித்த இந்த 14 நாட்கள் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.