கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 10 பேர் இனம்காணப்பட்டுள்ளனர், அதில் 06 பேர் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 02 பேர் கடற்படை சிப்பாய்கள் என்றும் ஏனைய இருவர் நாட்டினுள் இருக்கும் பொதுமக்கள் என்றும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.