சற்றுமுன் வரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் வரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக பதிவு!

இன்று (01.06.2020 10.30 PM) வரையில் இலங்கையில் 1,643 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 10 பேர் இனம்காணப்பட்டுள்ளனர், அதில் 06 பேர் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 02 பேர் கடற்படை சிப்பாய்கள் என்றும் ஏனைய இருவர் நாட்டினுள் இருக்கும் பொதுமக்கள் என்றும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.