குவைட்டில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழிந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 1633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.