கொழும்பு நகரில் தங்குபவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நகரில் தங்குபவர்களுக்கான விசேட அறிவித்தல்!

கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தொம்பே பகுதியில் சட்டவிரோமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே தொம்பே பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

வாடகைக்கு பெற்ற வீடு ஒன்றிலேயே இவ்வாறு சட்டவிரோமான முறையில் இந்த மதுபான விற்பனை நிலையம் நடத்திச் செல்லப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெறாது தங்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பும் கருதியும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.