மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் ஆசி வேண்டி சமயக்கிரிகைகள் மேற்கொண்ட ஜனாதிபதி!
Posted by Yazh NewsAuthor-
மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பொலன்னறுவையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோமாவதி விகாரையில் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
சோமாவதி புண்ணிய பூமிக்கு சென்ற அவர் ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
சோமாவதி விகாரையில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.