வெறுப்புணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய குற்றச்சாட்டிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஸாகிர் நாய்ககின் Peace TV யானது, உருது அலைவரிசைக்கு 2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் Peace TV ஆங்கில அலைவரிசைக்கு ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அலைவரிசைகளும் வெறுப்புப் பேச்சு அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி வன்முறையை தூண்டக்கூடியதாக இருந்தது எனவும் ஒவ்கொம் தெரிவித்துள்ளது.