இலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா பாதிப்பால் பத்தாவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மங்கிபிரிட்ஜ் இராணுவ  முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களில் பெண் ஒருவர் இன்று (25) அதிகாலை மரணமானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பி 162 நபர்களை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் 52 வயதான பயாகல்ல பிரதேசவாசி என இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் இரத்தமாதிரியும் அவருடன் தங்கி இருந்த இருவரின் இரத்தமாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா நோய் தொற்று சம்பந்தமான பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 21ஆம் திகதி கட்டார் நாட்டிலிருந்து 142 நபர்கள் நாடு திரும்பி நிலையில் திருகோணமலை கிளம்பம் பேக் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.