கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது வணிகத்துறை, பொறியியல் தொழில்நுட்பவியல் (Engineering Technology), உயிர்தொழில்நுட்ப பொறியியல் (Biotechnology Engineering) மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) ஆகுய பாட பரீட்சைகளில்கணிப்பான்களை (Calculator) இனை பயன்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று தெரிவித்தது.
விஞ்ஞான கணிப்பான்களை உபயோகிக்க முடியாது எனவும், சாதாரண கணிப்பான்களை மாத்திரமே உபயகோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் தொடர்பாடல் இலத்திரனியல் உபகரணங்களான கைக்கடிகாரம், கையடயக்க தொலைபேசி மற்றும் வேறு இலத்திரனியல் உபகரணங்கள் பரீட்சைக்கு எடுத்து வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.