கடந்த 24 நேரத்துக்குள் 1,554 பேர் இனம்காணப்பட்டுள்ளதுடன் மேலும் 688 பேர் குணமடைந்த்துள்ளனர். இது இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 7,288 ஆக உயர்த்தியுள்ளது.
இன்றைய நாள் வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,651 ஆக பதிவாகியுள்ள அதே நிலையில், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,346 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.