
அத்துடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வட்டி வீதங்களை குறைக்குமாறு மத்திய வங்கி, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கடன் வட்டி வீதங்ளை குறைப்பது தொடர்பில் நிதி நிறுவனங்கள் மேலும் காலம் தாழ்த்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உரிய முறையில் நிதி நிறுவனங்கள் கடன் வட்டி வீதங்களை குறைப்பதற்கு காலம் தாழ்த்துவது ஏமாற்றமளிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

