கொட்டகலை நகரில், பொது சுகாதார அதிகாரிகள் (PHI) இன்று (16) திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது இறைச்சி கடைகள், மரக்கறி கடைகள், பழக்கடைகள், மதுபானசாலைகள், ஹோட்டல்கள் உட்பட மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக நாடும் வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சோதனையின்போது , மாட்டிறைச்சி கடையொன்றில் பழுதடைந்த நிலையில் இருந்த 30 கிலோ மாட்டிறைச்சி அவ்விடத்தில் வைத்தே அழிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மேலும், முகக்கவசம் மற்றும் கைகவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை வியாபார நிலையங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் அதனை பின்பற்ற தவறும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.