சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும் , நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரில், பொது சுகாதார அதிகாரிகள் (PHI) இன்று (16) திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இறைச்சி கடைகள், மரக்கறி கடைகள், பழக்கடைகள், மதுபானசாலைகள், ஹோட்டல்கள் உட்பட மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக நாடும் வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சோதனையின்போது , மாட்டிறைச்சி கடையொன்றில் பழுதடைந்த நிலையில் இருந்த 30 கிலோ மாட்டிறைச்சி அவ்விடத்தில் வைத்தே அழிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

மேலும், முகக்கவசம் மற்றும் கைகவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை வியாபார நிலையங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் அதனை பின்பற்ற தவறும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.