பொது தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட போதிலும் குறித்த தினம் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்னும் இருப்பது ஒன்னரை மாத காலம் மட்டுமே இருப்பினும் இதுவரை வேட்பாளர் விருப்ப எண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டமும் இன்று இடம்பெற்றுள்ளதுடன் தேர்தலில் போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு செய்திகள் தெரிவித்துள்ளது.