போர்வீரர்களை நினைவு கூறும் வைபவத்தில் இரண்டு சிப்பாய்களுக்கு கொறோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போர்வீரர்களை நினைவு கூறும் வைபவத்தில் இரண்டு சிப்பாய்களுக்கு கொறோனா!

போர்வீரர்களை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற இரண்டு கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது, ​​கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார, குறித்த கடற்படை சிப்பாய்களின் முதல் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் முடிவுகளை உறுதிப்படுத்த இரண்டாவது ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயிற்சிக்காக அனுப்பப்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு மாதமாக தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “இதற்கு முன்னர் முதல் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொண்டபோது கொறோனா இருப்பதாகவும், இரண்டாவது பறிசொதனையில் வைரஸ் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய சம்பவங்கள் இருந்துள்ளது.

இதன் அடிப்படையில், குறித்த இரண்டு சிப்பாய்கலினதும் பி.சி.ஆர் மறு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இருந்தபோதிலும், முதல் இரண்டு வீரர்களினதும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியாத அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.