இது குறித்து AFP மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம்செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர்.
அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்படலாம் என அறிக்கையொன்றில் மருத்துவர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக இரண்டாம் சுற்று வைரஸ்பரவல் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இறுதிசடங்குகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இறுதிசடங்குகளை குடும்பஉறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் தொண்டமானின் உடலிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மக்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது,கலக்கமடைந்துள்ள ஆதரவாளாகள் பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்து அஞ்சலி செலுத்த முயல்கின்றனர் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-Rajeevan Arasaratnam