மேலும் எதிர்வரும் நோன்புப்பெருநாள் அன்று இலங்கை மக்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்:
- இம்முறை நெருக்கடியானதொரு சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என்ற உணர்வுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி பெருநாள் தினத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்.
- பெருநாள் தொழுகையை பள்ளிவாசலிலோ, திடல்களிலோ கூட்டாக தொழுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மாறாக எமது வீடுகளிற்குள்ளேயே எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து பெருநாள் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.
- இம்முறை பெருநாளை வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல். அத்துடன் வீண் பிரயாணங்களையும் ஒன்று கூடல்களையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
- பெருநாள் தினத்திலும் ஏனைய தினங்களிலும் மற்றவர்களுடன் முஸாபஹா, முஆனகா செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
- ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகை வரை அதானுக்குப் பின்னர் மஸ்ஜித்களில் தக்பீரை ஒலிபெருக்கியில் சொல்வதற்காக ஒருவரை நியமித்து ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
- பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் விடயத்திலும் கரிசணை காட்டி தம்மாலான உதவிகளை செய்து கொள்ள வேண்டும்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா