இவர்களில் 3,078 பேர் மாணவர்கள். 4,040 பேர் குறுகிய கால விசா அனுமதியில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். 27,854 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்.
3,527 பேர் குடும்பத்துடன் தங்கி வாழ்பவர்கள். 484 பேர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த 3,600 பேர் 15 நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த மாணவர்கள். ஏனையோர் அரச அதிகாரிகள் மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.