றமழான் பண்டிகைக்கு 24 மணிநேர ஊரடங்கு உத்தரவு! சவூதி அரசு உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

றமழான் பண்டிகைக்கு 24 மணிநேர ஊரடங்கு உத்தரவு! சவூதி அரசு உத்தரவு!

சவூதி அரேபியாவில் றமழான் பண்டிகை விடுமுறையின் போது 24 மணிநேர ஊரடங்கை அமுல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடும்சரிவை சந்தித்துள்ள நிலையில், அரசின் செலவினங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் றமழான் பண்டிகையின் போது 24 மணிநேர ஊரடங்கை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சவூதியில் றமழான் விடுமுறையான மே 23ஆம் திகதி முதல் மே 27ஆம் திகதி வரை 24 மணி நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விடுமுறை முடியும்வரை அமலில் இருக்கும்.

ரமழானுக்கு முந்தைய நாள் வரை காலை 9 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.