இன்றைய தினம் (26) மாத்திரம் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகமான எண்ணிக்கையாகும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 1317 ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் இன்று இனம்காணப்பட்டவர்களில் 127 பேர் குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் மேலும் 08 பேர் கடற்படை பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் மேலும் 17 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் குணமடைந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 595 ஆகும்.