கொரோனா நோயாளிகள் மேலும் இனம்காணப்பட்டனர். மொத்த எண்ணிக்கை 1,317 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நோயாளிகள் மேலும் இனம்காணப்பட்டனர். மொத்த எண்ணிக்கை 1,317 ஆக உயர்வு!

இன்றைய தினம் (26) மாத்திரம் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 1317 ஆக உயர்த்தியுள்ளது.

மேலும் இன்று இனம்காணப்பட்டவர்களில் 127 பேர் குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் மேலும் 08 பேர் கடற்படை பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் மேலும் 17 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் குணமடைந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகளின் மொத்த  எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 595 ஆகும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.