டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின்படி 11 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய இடங்களாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுதுறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாறை (கல்முனை) ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமும் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.