நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று (24) மாலை 1,118 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை வரை புதிதாக தொற்றுக்குள்ளான 29 பேர் இனங்காணப்பட்டனர்.
இனம்காணப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இன்று வரை 674 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 435 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 09 பேர் உயிர்ப்பலி ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.