கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வயதான இவர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று (சனிக்கிழமை) திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 10 வருடங்களாக நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக, கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார்.

இதனால் கடும் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ள வழி தெரியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய சடலம் நேற்று ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடைத்தது.

`இத்தகைய சமயத்தில் தாமஸை போன்ற ஆட்கள்தான் அதிகம் தேவைப்படும்; அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது' என்கின்றனர் அவருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள். இவருக்கு ஒரு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் மிக முக்கியமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சம்பவம் ஜெர்மனியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.