கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி உட்பட குடும்பத்தினரை அழைத்து செல்ல தயாராக இருக்கும் விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி உட்பட குடும்பத்தினரை அழைத்து செல்ல தயாராக இருக்கும் விமானம்!

கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல சுவிஸ் எயார் விமானம் ஒன்று தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூரிச் விமான நிலையத்தில் இந்த விமானம் தயார் நிலையில் உள்ளதாக அங்கு சேவை செய்யும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தூதரக அதிகாரியை சுவிட்சர்லாந்திற்கு அனுப்புமாறு சுவிஸ் இராஜாங்க செயலாளர் மேரிஸ், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த சுவிஸ் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவருவதற்கு சிவில் விமான சேவை அதிகாரிகளினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த சம்பவம் தொடர்பல் இதுவரையில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.