யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.