அரசியலிருந்து ஒதுங்குகிறேன், எனக்கு சண்டைபிடிக்க முடியாது! - சஜித் அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியலிருந்து ஒதுங்குகிறேன், எனக்கு சண்டைபிடிக்க முடியாது! - சஜித் அறிவிப்பு

சஜித் பிரேதமதாச இன்று (18) மாலை தனக்கு நெருக்கமான ஐ.தே.க. எம்.பி.க்கள் மற்றும் முக்கிய சில பிரமுகர்களை கோல்பேஸ் ஹோட்டலில் சந்தித்தார்.

மூடிய அறைக்குள் பேசப்பட்ட சகல விடயங்களும் எமது சகோதர செய்தி இணையத்திற்கு கிடைக்கபெற்றது.

இதன்போதே ஒரு கட்டத்தில், சஜித் பிரேதமதாச எனக்கு ரணிலுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எல்லோரும் இணைந்து ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன், என மனவருத்தங்களு டன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டது போன்றே இன்று பாராளுமன்றத்தில் நடந்த ஆளும் கட்சி கூட்டத்திலும் சஜித் பங்கேற்கவில்லை என்பது மேலதிகத் தகவல் ஆகும்.

_Jaffna Muslim

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.