காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை

காலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.  குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின்  யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில்,  காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை.  எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள்  தெரி­வித்­துள்­ளன.

இத­னி­டையே நேற்று இரத்­தி­ன­புரி மாவட்டம், நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகு­தியில் பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.  முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்­த­வர்கள் இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ள­தா­கவும் இதன்­போது பள்­ளி­வா­சலின் கண்­ணா­டி­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் நேற்று சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி  முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடாத்­து­வது வெளிப்­பட்­ட­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்கள் கைது செய்­யப்பட்­ட­தா­கவும் பொலிஸார் கூறினர்.

நிவித்­தி­கல, கல­வான வீதியிலுள்ள குறித்த கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில்  மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

-Virakesari

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.