கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னாள் விஷேட பொலிஸ் குவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னாள் விஷேட பொலிஸ் குவிப்பு!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விஷேட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையில் குறித்த பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ரயில்வே ஊழியர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஓய்வில் இருந்த ரயில்வே ஊழியர்கள் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அப்பகுதியில் அமைதியற்ற நிலை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள காரணத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு புகையிரதத்திற்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோர்கள் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.