இன்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கோட்டாபய இடையிலான பேச்சுவார்த்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கோட்டாபய இடையிலான பேச்சுவார்த்தை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) இரவு நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. அறிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.


கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைக்கு தீர்வு கண்டு முடியுமான வரை அவருக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.