இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை! -தேர்தல் ஆணைக்குழு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை! -தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 18ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு அதிக நீளமானது என்பதால், வாக்குகள் எண்ணும் பணிகளுக்கு அதிக நேரம் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின்போது, குறைந்தது ஒரு மாகாணத்திலாவது இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக, இந்தியா மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.