ஸஹ்ரானுடன் தொடர்பிலிருந்த ஹக்கீம் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியுமா? -தினேஷ் கேள்வி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸஹ்ரானுடன் தொடர்பிலிருந்த ஹக்கீம் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியுமா? -தினேஷ் கேள்வி

பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடபில் இருந்த அமைச்சர் ரவூப் ஹகீம் எவ்வாறு பயங்கரவாத செயற்பாட்டை கண்டறிய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும். அவ்வாறு இருக்கையில் தெரிவுக்குழு அறிக்கையின் சுயாதீன தன்மையில் எமக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை நேற்று (23) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிரணி அரசியல் குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன ஒழுங்குப்பிரச்சினை எழுப்பினார்.

இதன்போது அவர், குறித்த அறிக்கையை பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களை கொண்டு எவ்வாறு தயாரிக்க முடியும். எந்த அடிப்படையில் அதனை சபையில் ஏற்றுகொள்ள முடியும். இதே கேள்வி மக்களுக்கும் உள்ளது என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.