
நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை நேற்று (23) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிரணி அரசியல் குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன ஒழுங்குப்பிரச்சினை எழுப்பினார்.
இதன்போது அவர், குறித்த அறிக்கையை பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களை கொண்டு எவ்வாறு தயாரிக்க முடியும். எந்த அடிப்படையில் அதனை சபையில் ஏற்றுகொள்ள முடியும். இதே கேள்வி மக்களுக்கும் உள்ளது என்றார்.