இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக சௌரவ் கங்குலி தெரிவானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக சௌரவ் கங்குலி தெரிவானார்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக, இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி நேற்று  (23) தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்கு சௌரவ் கங்குலி மாத்திரமே போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் அவர் புதிய தலைவராக போட்டியின்றி தெரிவானார்.

47 வயதான சௌரவ் கங்குலி இந்தய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் 39 ஆவது தலைவர் ஆவார்.

இந்தியாவின் சார்பில் 1996 முதல் 2008 ஆம் ஆண்டுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய செரளவ் கங்குலி 16 சதங்கள் உட்பட 7,212 ஓட்டங்களைக் குவித்தார். 32 விக்கெட்களையும் அவர கைப்பற்றினார்.

அத்துடன் 311 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 11,363 ஓட்டங்களைக் குவித்ததுடன் 100 விக்கெட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.