
இந்தய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்கு சௌரவ் கங்குலி மாத்திரமே போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் அவர் புதிய தலைவராக போட்டியின்றி தெரிவானார்.
47 வயதான சௌரவ் கங்குலி இந்தய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் 39 ஆவது தலைவர் ஆவார்.
இந்தியாவின் சார்பில் 1996 முதல் 2008 ஆம் ஆண்டுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய செரளவ் கங்குலி 16 சதங்கள் உட்பட 7,212 ஓட்டங்களைக் குவித்தார். 32 விக்கெட்களையும் அவர கைப்பற்றினார்.
அத்துடன் 311 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 11,363 ஓட்டங்களைக் குவித்ததுடன் 100 விக்கெட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.