இம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் விடுக்கப்படும் என தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, அக்டோபர் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், நவம்பர் 15 முதல் 30 வரையுள்ள சனிக்கிழமைகளில் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும், மேலும் வேட்பு மனு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகுதியுள்ள அரச அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலக தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.