சிறுவர்களின் கல்விக்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்! -கோட்டாபய ராஜபக்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்களின் கல்விக்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்! -கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் இலவச கல்வி நடைமுறையில் இருந்தாலும் இலவச கல்விக்காக ஒதுக்கப்படும் பணம் போதுமானதாக இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் முன்னேறிச் செல்ல எமது சிறுவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்காவிடின் எமக்கு எதிர்கால பொருளாதார திட்டம் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்விக்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பாலர் பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.