ரணிலுடன் எதிர்வரும் 6ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தை! -கபீர் ஹாஷிம்
Posted by Yazh NewsAuthor-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் எதிர்வரும் 06ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தி, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தற்பொழுது நாட்டில் உள்ள அரசியல் நிலவரங்களை வைத்து மக்கள் ஆதரவு குறித்து ஆய்வு செய்து முடிவுக்கு வருமாறும் தாம் பிரதமரைக் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.