காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவு தரவில்லை – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவு தரவில்லை – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூது குரேஷி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அவர் காஷ்மீர் விவகாரம் பற்றி புலம்பித்தள்ளி விட்டார்.

அப்போது அவர் கூறும்போது, “நீங்கள் (மக்கள்) முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழக்கூடாது. கைகளில் மாலையோடு உங்களுக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் யாரும் காத்திருக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டார்.

முஸ்லிம் நாடுகள் கூட பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை என்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அந்த நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டார்கள். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர்களுக்கென்று பொருளாதார நலன்கள் உண்டு. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட மக்களின் சந்தை. ஏராளமானோர் அங்கு (இந்தியா) முதலீடு செய்துள்ளனர். இஸ்லாம் காப்பாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் சொந்த நலன்தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது” என்று கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.