பாதாள குழுக்கள் இடையில் மோதல் : இருவர் வெட்டிக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதாள குழுக்கள் இடையில் மோதல் : இருவர் வெட்டிக்கொலை!

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடுத்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதன்போது பாதாள உலகக்குழு உறுப்பினரான மட்டக்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய சி.எச். இம்ரான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.