ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல், ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல், ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்க நடவடிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பதற்காக திகதி ஒன்றைக் கோர எதிர்பார்ப்பதாக அந்த குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரிடம் தாக்குதல் குறித்து  சில சாட்சியங்களை பெறுவதற்காக நாளை தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க எதிர்ப்பார்ப்பதாக  ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை  சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.