இன்று க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (05) தேசிய ரீதியில் ஆரம்பமாவதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய ரீதியில் 2,678 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு இம்முறை தோற்றுகின்றனர். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறவுள்ளது.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.