பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுமையான தடை அமுல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுமையான தடை அமுல்!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.

இதையடுத்து, தவறான தகவல்களை, வதந்திகளைப் பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் நிறுவனங்களின் சேவை முடக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரி ஃபாவத் ஹூசைன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து, இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.