தாமதித்தாலும் தரமானவர்களை களமிறக்குவோம்.! -நளின் பண்டார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாமதித்தாலும் தரமானவர்களை களமிறக்குவோம்.! -நளின் பண்டார

ஜனாதிபதி கனவுள்ள எத்தனையோ பேர் தமது கட்சியிலும் இருப்பதாகவும், கனவு காண்பது மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான தகுதியாகாது எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருதுறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் ஜனாதிபதியாக வேண்டும் என எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அனைத்து துறைகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடியவரையே நாம் களமிறக்குவோம்.

அது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை, இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போனாலும் பிரச்சினையில்லை. எம்மிடம் இலகுவில் சந்தைப்படுத்த முடியுமான தரமான ஒரு பொருளே உள்ளது. அதனைப் புதிதாக தரப்படுத்த வேண்டியதில்லை.

அவ்வாறானவர்களை இறுதி சந்தர்ப்பத்தில் களமிறக்கினாலும் இலகுவாக விற்பனை செய்யலாம்  எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.