மஹியங்கனை திருச்சபை மீதான தாக்குதலுக்குப் பின்னால் பொதுபல சேனா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹியங்கனை திருச்சபை மீதான தாக்குதலுக்குப் பின்னால் பொதுபல சேனா?

மஹியங்கனை மெத்தடிஸ்த திருச்சபையின் தாக்குதலுக்குப் பின்னால் பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டிருக்கலாம் என்று இலங்கை மெத்தடிஸ்தத் திருச்சபையின் சுவிஷேசகச் சேவை செயலாளர் அருட்தந்தை ரமேஷ் பெர்ணான்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹியங்கனை மெத்தடிஸ்தத் திருச்சபை மீது பிக்குகள் மூன்றுபேர் சென்று தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 04 நாட்களாகின்ற போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இருந்த போதிலும் தாக்குதல் நடத்தப்பட்டபோது சபைக்கு வெளியே அப்பிரதேசத்திலுள்ள மொறயாய ஸ்ரீ நாகவனாராமய விகாரையின் தலைமைப்பிக்கு கலவல சுஜாத்த தேரர் நின்றுகொண்டிருந்த போதிலும் தாக்குதலைத்தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் தெஹிகொல்ல ரத்தன தேரர் தலைமையிலான ஹந்தவெல விகாரைப் பிக்கு, மினித்தே விகாரைப் பிக்கு உள்ளிட்ட மூன்று பிக்குகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஜேசுதாஸ் என்கிற ஊழியம் செய்யும் மெத்தோடிஸ்த சபை ஊழியர் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று நேற்று புதன்கிழமை மாலை வீடு திரும்பியிருப்பதாக அருட்தந்தை ரமேஷ் பெர்ணான்டோ எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஹசலக்க – நன்னப்புராவ மெத்தோடிஸ்தத் திருச்சபை அருட்தந்தை லூக் எதிரிசிங்க ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.