நாட்டின் பெரும்பாலான இடங்களில் அசாதாரண காலநிலை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அசாதாரண காலநிலை

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், இது குறித்து அடுத்த 36 மணி நேரத்திற்குள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அம்பகமுவ, கொத்மலை, நுவரெலிய பிரதேசங்களுக்கு நிலசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.