இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காது: ஹெலய்னா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காது: ஹெலய்னா

மில்லேனியம் சேலேஞ்ச் திட்டத்தின் ஊடாக இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சபையின் அமெரிக்க வர்த்தக பேரவையின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஹெலய்னா டெப்லிட்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கவும் அமைதி, நல்லிணக்கத்தை அதிகரிக்கவும் வலுவான பொருளாதார வளர்ச்சி அவசியமென அமெரிக்க நம்புகிறது.

மில்லேனியம் சேலேஞ்ச் என்பது அபிவிருத்திக்காக நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் நிறுவனம்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்காகவும் அமெரிக்கா, 480 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இது அமெரிக்க மக்கள் வழங்கும் அன்பளிப்பே அன்றி கடனுதவியல்ல. இது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் கடன் அல்ல.

இந்த நிதியுதவியின் ஊடாக போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள், இலங்கை அரச காணிகளின் நிர்வாக மறுசீரமைப்பு ஆகிய செயற்பாடுகளே மேற்கொள்ளப்படும்.

இவற்றினால், இலங்கையின் கடன் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்காது என்பதை நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

மில்லேனியம் சேலேஞ்ச் உதவி தொடர்பாக ஊடகங்களில் குறிப்பிடத்தக்களவு தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து, காணி நிர்வாகம் என்பன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான தடையாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான இது சம்பந்ததான உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், சகல துறைகளையும் கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது என்பன இலங்கை அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்படும்.

இந்த உடன்படிக்கையின் கீழ் எந்த காணிகளையும் உரிமையாக்கவோ, நிர்வாகம் செய்யவோ எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு முடியாது.

திட்டத்தின் இறுதியில் அமெரிக்காவுக்கு அதிகமான காணி உரிமை கிடைக்குமென ஊடகங்களில் தவறான செய்திகளும் வெளியாகின்றன.

நாம் வழங்கிய 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முற்பணம் எனவும் அந்த தகவல்களில் கூறுகின்றனர்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என ஹெலய்னா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.