பொன்சேகாவுக்கு சஜித் பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொன்சேகாவுக்கு சஜித் பதில்!

நாட்டில் இருக்கும் ஜனநாயக முறைமை காரணமாக எந்தவொரு நபருக்கும் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் கிராமமட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைத்து அதற்கான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.